தழுவி
அணைத்து
முத்தமிட்டு முத்தமிட்டு
எனை
கொஞ்சி
கெஞ்சி
கேட்கிறான்
...........
வெறும்போர்வையால்
போர்த்தியிருந்த
எனது
நாணத்தை மீறி
"ம்"
என்றேன்.
"ம்"
என்ற
எனது
சொல்லின்
வீரியத்தை
விட
அவனின்
செயலின்
வீரியத்தில்
17,18
வருடங்களாய்
வைத்திருந்த
என்னை
தொலைத்து
பின் எழுந்து
அவன் கண்ணில்
என் காதலை துளாவினேன்
அவனோ...
எல்லாம் முடிந்து
அமைதியாய் தூங்குகிறான்
என்னில்
அவனை உமிழ்ந்து விட்டு...
காரி துப்பிய
அவனின்
காமத்தில்
காதலை
தொலைத்து
உடைகிறேன்......
அவனின் விந்து போல
எனது கண்ணீரும் சிதற
No comments:
Post a Comment